பாலமுருகன், சா.

பெருங்காற்று : (சிறுகதைகள்) சா. பாலமுருகன் - 1ம் பதிப்பு - சென்னை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., 2018 - vi, 149 p. 21 cm.

பழங்குடி மக்களின் வாழ்வியல் மற்றும் அவர்கள் சந்திக்கும் இடர்கள் குறித்து ஒரு கனமான படைப்பை சோளகர் தொட்டி என்ற நாவல் மூலம் தமிழ்ச் சமூகத்திற்கு கொடுத்த எழுத்தாளர். ச. பாலமுருகனின் அடுத்த படைப்பு "பெருங்காற்று". பல்வேறு இதழ்களில் வெளிவந்த அவருடைய பதின்மூன்று சிறுகதைகளை பெருங்காற்று என்ற தொகுப்பாக வெளியிட்டுள்ளார். பதின்மூன்று கதைகளையும் கனமான பாத்திரங்களோடு, கனமான பின்புலத்தோடு படைத்துள்ளார். அவ்வளவு எளிதில் படித்துக் கடந்துவிட முடியாதளவு கனமான கதைகள். மனிதர்களின் தினவாழ்வியல் போராட்டங்களையும், குரலற்ற மனிதர்களை இந்தச் சமூகம் எப்படியெல்லாம் கையாள்கிறது என்பதனையும் அதனால் ஏற்படும் வழியையும், வேதனையையும் கதையின் வழியே கண்முன் 'பெருங்காற்று' நிறுத்துகிறது.

9788123431642


தமிழ் இலக்கியம் - சிறுகதைகள்
Tamil literature -- short stories.

894.811301 / BAL