விடுதலைக்கு விதை தூவிய விவேகானந்தர் /
Viduthalaikku Vithai Thooviya Vivekanandar
த. ஸ்டாலின் குணசேகரன்
- 2ம் பதிப்பு
- சென்னை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி ) லிட் ., 2019
- xx, 152 p. ill. 21 cm.
தினமணி நாளிதளின் இணைப்பான 'இளைஞர்மணி'யில் வெளியான விடுதலை சார்ந்த கட்டுரைகள்.
சுவாமி விவேகானந்தர் என்ற ஆன்மீக இமயத்தின் தேசபக்தியை இளைய தலைமுறை உள்வாங்கிக் கொள்ளும் வண்ணம் தம் அற்புத எழுத்தாற்றலால், சிந்தனையால், செயல்திறத்தால் செதுக்கிய எழுத்துச் சிற்பி திரு. த.ஸ்டாலின் குணசேகரன் அவர்களின் எழுத்தாற்றலைப் பாராட்ட வார்த்தைகள் வசப்படவேயில்லை விடுதலைக்கு விதை தூவிய விவேகானந்தர்' மூலம் தேசபக்த வெளிச்சத்திற்கு விதை தூவிய திரு த.ஸ்டாலின் குணசேகரன் அவர்களுக்கு நன்றி தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார். இதுவரை சுவாமி விவேகானந்தரைப் பற்றி தத்துவ அறிஞர்கள், வரலாற்றாசிரியர்கள் பல்வேறு கோணங்களில் ஆராய்ச்சி செய்து எழுதியுள்ளனர். இந்நூல் அவற்றிலிருந்து வேறுபட்டு ஒரு தனித்துவத்தைக் கொண்டுள்ளது. இந்நூல் இளைஞர்களிடையே நாட்டுப்பற்றை வளர்க்கவும் சமுதாய நோக்கம், சேவை மனப்பான்மை, பண்பாட்டு உணர்வு உலகப்பார்வை, மனிதநேயம், சுயநலமின்மை போன்ற நற்பண்புகளை மேம்படுத்தவும் பயன்படும் என்பதில் சந்தேகமில்லை .